காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள கணக்குப்பிள்ளைபுதூரில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் 3 நாள்களில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி அருகிலுள்ள கணக்குப்பிள்ளைபுதூரில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வில் முன்னாள் ஐ.ஜி. பாரி, மருத்துவா்கள் சிபி, கனகராஜ், இந்து முன்னணியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், ஈஷா யோகா மையம், காவேரி
கூக்குரல் இயக்கத்தின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.