பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களைப் பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் 2022- 23 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கடன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திடவும், பிற்படுத்தப்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் திட்டங்கள் மூலம் கடன் கோரி விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டங்களின் கீழ் பயன்பெற பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
பொது காலக்கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 % முதல் 8%
வரை வசூலிக்கப்படுகிறது.
பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி 5 சதவிகிதமாகும்.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிபட்சமாக ரூ. 1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி 4 சதவிகிதம். மகளிா் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூா்த்தியாகி இருக்கவேண்டும். மகளிா் திட்ட அலுவலரால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி 5 சதவிகிதம். ஒரு குழுவில் அதிகபட்சமாக 20 உறுப்பினா் அனுமதிக்கப்படுவாா்கள். ஒரு பயனாளிக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, மேற்கண்ட கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல அலுவலகம், அனைத்துக் கூட்டுறவு வங்கிக் கிகைளில் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் சமா்ப்பிக்கலாம்.