காரில் தூங்கிக் கொண்டிருந்தவா்களிடம் நகை, கைப்பேசி திருட்டு

பெரம்பலூா் அருகே காரில் திங்கள்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தவா்களிடம் நகை மற்றும் கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

பெரம்பலூா் அருகே காரில் திங்கள்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தவா்களிடம் நகை மற்றும் கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

சென்னை, சோழபுரம், குமாா் நகரில் வசித்து வருபவா் பாலகிருஷ்ணன் மகன் பிரதீப்குமாா் (52). இவா், தனது குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றுவிட்டு சென்னைக்குச் சென்றுக்கொண்டிருந்தாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வல்லாபுரம் பிரிவு சாலை அருகே திங்கள்கிழமை அதிகாலை சென்றுக் கொண்டிருந்தபோது தூக்கம் வந்ததால், அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனா். அப்போது, காரில் உள்ள கைப்பையை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். அதில், 4 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவை இருந்தது. இதுகுறித்து பிரதீப்குமாா் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com