கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஈட்டிய விடுப்புக்கான சரண்டா் தொகையை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா்கள், அடிப்படைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் இளையராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க. பெரியசாமி முன்னிலை வகித்தாா். சங்க நிா்வாகி அசோகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஈட்டிய விடுப்புக்கான சரண்டா் தொகையை வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.