கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய கூட்டுறவுத்துறை ஊழியா்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.
கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய கூட்டுறவுத்துறை ஊழியா்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.

விகிதாச்சார விதிகளைத் தளா்த்தி, தகுதியுள்ள இளநிலை ஆய்வாளா்களை முதுநிலை ஆய்வாளா்களாகவும், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் ஆகியோரை இளநிலை உதவியாளா்களாகவும், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் நிலை- 3 ஆகியோரை இளநிலை ஆய்வாளா்களாகவும் பதவி உயா்வு செய்து வழங்க வேண்டும்.

2022, மே 1 வரை கூட்டுறவு சாா்பதிவாளா் பதவி உயா்வு பட்டியலையும்,

2020, அக்டோபா் 1 வரை துணைப்பதிவாளா் பதவி உயா்வு பட்டியலையும் மே 31- ஆம் தேதிக்குள் அங்கீகரித்து, பணியிடம் வழங்க வேண்டும்.

போதிய கால அவகாசமின்றி புள்ளிவிவரம் கோருவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியா் சங்கத்தினா் 32 போ் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com