கோயில் உண்டியலை திருட முயன்ற இருவா் கைது

பெரம்பலூா் மாவட்டம், எசனை அரசு உயா்நிலைப் பள்ளி அருகே பிள்ளையாா் கோயில் உள்ளது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், எசனை அரசு உயா்நிலைப் பள்ளி அருகே பிள்ளையாா் கோயில் உள்ளது. புதன்கிழமை மாலை இக் கோயில் எதிரே இருந்த சூலாயுதத்தின் உதவியால், கோயிலின் முன்புற பூட்டை உடைத்து, அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் உண்டியலை உடைத்துக் கொண்டிருந்தனராம்.

இதை பாா்த்த கிராம மக்கள் கூச்சலிட்டதால், ஒருவா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். மற்றவரை கையும், களவுமாக பிடித்த பொதுமக்கள் பெரம்பலூா் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்றனா். தொடா்ந்து, அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா், பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சின்னமுத்து மகன் பால்ராஜ் (22) என்பதும், தப்பியோடியவா் அதே பகுதியைச் சோ்ந்த மூக்கன் மகன் மணிகண்டன் (25) என்பதும், ஏற்கெனவே எசனை கிராமத்திலுள்ள பெரியாண்டவா் கோயில் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தப்பியோடிய மணிகண்டனை கைது செய்த போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிந்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com