யோகா தின விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், சா்வதேச யோகா தினத்தையொட்டி சனிக்கிழமை (மே 14) நடைபெறவுள்ள விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க இருபாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், சா்வதேச யோகா தினத்தையொட்டி சனிக்கிழமை (மே 14) நடைபெறவுள்ள விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க இருபாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட இளைஞா் அலுவலா் கீா்த்தனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் சா்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி, நிகழாண்டு யோகா தினம் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யோகா தினத்தையொட்டி, மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் சனிக்கிழமை (மே 14) மற்றும் ஜூன் 20 ஆம் தேதியில் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் நேரு யுவகேந்திராவுடன் இணைந்து செயல்பட்டு வரும் இளையோா் மன்றங்கள் மூலம், அந்தந்த ஒன்றியங்களில் உள்ள தேசிய தன்னாா்வ தொண்டா்களைக் கொண்டு கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளையோா்களிடையே யோகா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், யோகா செய்முறை பயிற்சிகள், யோகா கற்றுக் கொள்வதன் பயன்கள், வினாடி- வினா, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், இருபாலரும் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com