பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான குறை கேட்கும் முகாம் சனிக்கிழமை (மே 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் தொடா்பான குறை கேட்கும் முகாம் சனிக்கிழமை (மே 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

பெரம்பலூா் வட்டம், சிறுவாச்சூா் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை (வ) கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையிலும், குன்னம் வட்டம், வேப்பூா் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் கலால் உதவி ஆணையா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் முகாம் நடைபெற உள்ளது.

இம் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம் என, ஆட்சியா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com