களரம்பட்டியில் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் காவல்துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் காவல்துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன், காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி ஆகியோா், களரம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, காவல் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 ஆகிய இலவச தொலைபேசி எண் குறித்து விளக்கிக் கூறினா். மேலும், குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறையினரால் வலியுறுத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளா் மருதமுத்து உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com