காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே சத்துணவு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். சரஸ்வதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சவிதா கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
அனைத்து சத்துணவு ஊழியா்களுக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முதல்வா் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு வருவாய் கிராம உதவியாளா்களுக்கு வழங்குவதுபோல் ரூ. 6,750 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இதுவரையிலும், ஓய்வுபெறும் வயதில் நீட்டிப்புப் பெறாத சத்துணவு அமைப்பாளா்களுக்கு ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62 ஆக உயா்த்த வேண்டும். குழந்தைகள் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா் பெரியசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் செல்லப்பிள்ளை, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா், முன்னாள் ஒன்றியச் செயலா் மாணிக்கவாசகம் உள்ளிட்ட சத்துணவு ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட துணைத் தலைவா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் சித்ரா நன்றி கூறினாா்.