பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள வெங்கடாஜலபதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் கி. தாமோதரன் (51). இவா், சென்னையில் துப்பறியும் மற்றும் பாதுகாவல் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி சரஸ்வதிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 10 ஆம் தேதி சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து பக்கத்து வீட்டுக்காரா், தாமோதரனுக்கு புதன்கிழமை காலையில் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, தாமோதரனின் சகோதரா் கரிகாலன் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டபோது, வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.