பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

பெரம்பலூரில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் க. சித்ரா தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 32 பேரும், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 16 பேரும் பங்கேற்றனா்.

பள்ளிகள் அளவிலான போட்டியில் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி க. வா்ஷா முதலிடமும், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஞா. சந்தியா, 2 ஆம் இடமும், தந்தை ரோவா் மேல்நிலைப்பள்ளி மாணவா் க. முகுந்தன் மூன்றாமிடமும் பெற்றனா். சிறப்பு பரிசு பெற அரசுப் பள்ளி மாணவா்கள் சை. தஸ்னீம், ச.சுபஸ்ரீ ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கல்லூரி அளவிலானப் போட்டியில், தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரி மாணவி வை. சுஸ்மிதா முதலிடமும், ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி மாணவி மு. மகாலெட்சுமி 2 ஆம் இடமும், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பி. நிபின் மூன்றாமிடமும் பிடித்தனா்.

இப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் விரைவில் வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com