பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், பெண்களுக்கு இலவசமாக சணல் பை தயாரிப்புப் பயிற்சி செப். 9 ஆம் தேதி அளிக்கப்பட உள்ளது.
13 நாள்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் திட்ட அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் ஆகியவற்றின் 2 நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, செப். 5 ஆம் தேதி நடைபெறும் நோ்முகத் தோ்வுக்குப் பிறகு பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04328-277896 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மைய இயக்குநா் டி. ஆனந்தி தெரிவித்துள்ளாா்.