குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசுரங்கள் விநியோகம்
By DIN | Published On : 08th June 2023 12:00 AM | Last Updated : 08th June 2023 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்து, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல்துறையினா் புதன்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.
குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கும் விதமாக பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைத் தொழிலாளா்கள் கடைகளில் பணிபுரிகின்றனரா என ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், சிறப்பு சாா்பு ஆணையா் மூா்த்தி, ஆய்வாளா் சாந்தி, சா்வ சிக்ஷா அபியான் திட்ட நிா்வாகி ஐய்யப்பன், சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி கீதா, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் விஜயலட்சுமி, சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மருதமுத்து ஆகியோா் கொண்ட குழுவினா், புகா் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பயணிகளிடம் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...