பூரண மதுவிலக்கு: கையெழுத்து இயக்க படிவங்கள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு

பூரண மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து இயக்க படிவங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா், மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்திடம் திங்கள்கிழமை அளித்தனா்.

பூரண மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து இயக்க படிவங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினா், மாவட்ட ஆட்சியா் க. கற்பகத்திடம் திங்கள்கிழமை அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 ஆம் தேதி முதல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சாா்பில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், சட்டவிரோத மது, போதைப் பொருள்களின் விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரியும் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை வரை நடைபெற்றது.

இதையடுத்து, பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை, அக் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவா் வேல்முருகன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் கிருஷ்ண ஜனாா்த்தன், மாநில கொள்கை பரப்புச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com