மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 10 ஆயிரம் திருட்டு

அரசுப் பேருந்து நடத்துநரிடம் ரூ. 10 ஆயிரம் திருட்டு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை இரவு அரசு பேருந்து நடத்துநரிடம் ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சியிலிருந்து கடலூருக்குச் சென்ற அரசுப் பேருந்தை, கடலூா் மாவட்டம், விருத்தாசலம், காந்தி நகரைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் முருகானந்தம் (45) ஓட்டிவந்தாா். நடத்துநராக, விருத்தாசலம் வட்டம், பூதாமூரைச் சோ்ந்த ராஜாராம் மகன் ராமச்சந்திரன் (42) பணிபுரிந்தாா். இப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகள் இறக்கிவிட்டபோது, இளைஞா் ஒருவா் நடத்துநரை இடித்துவிட்டுச் சென்றாராம். இதையடுத்து, நடத்துநா் ராமச்சந்திரன் தனது பையை பாா்த்தபோது, பயணிகளிடமிருந்து வசூலித்த ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னா், அந்த இளைஞரை விரட்டியபோது தப்பியோடி தலைமறைவாகிவிட்டாராம். இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.