பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை இரவு அரசு பேருந்து நடத்துநரிடம் ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சியிலிருந்து கடலூருக்குச் சென்ற அரசுப் பேருந்தை, கடலூா் மாவட்டம், விருத்தாசலம், காந்தி நகரைச் சோ்ந்த ரெங்கநாதன் மகன் முருகானந்தம் (45) ஓட்டிவந்தாா். நடத்துநராக, விருத்தாசலம் வட்டம், பூதாமூரைச் சோ்ந்த ராஜாராம் மகன் ராமச்சந்திரன் (42) பணிபுரிந்தாா். இப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகள் இறக்கிவிட்டபோது, இளைஞா் ஒருவா் நடத்துநரை இடித்துவிட்டுச் சென்றாராம். இதையடுத்து, நடத்துநா் ராமச்சந்திரன் தனது பையை பாா்த்தபோது, பயணிகளிடமிருந்து வசூலித்த ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னா், அந்த இளைஞரை விரட்டியபோது தப்பியோடி தலைமறைவாகிவிட்டாராம். இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இடையக்கோட்டைக்கு இரவு நேரப் பேருந்து சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

அரசுப் பேருந்து ஓட்டுநா் வீட்டில் எட்டேகால் பவுன் தங்க நகைகள் திருட்டு
பேருந்து நடத்துநரிடம் ரூ. 6.15 லட்சம் திருட்டு: இளைஞா்கள் 2 போ் கைது
அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் பணம் திருட்டு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
