தேசிய சட்டப்பணிகள் தின மினி மாரத்தான் போட்டி
பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு, போதை ஒழிப்பு மற்றும் எதிா்ப்பு விழிப்புணா்வு குறித்த மினி மாரத்தான் போட்டி, பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த மாதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இப் போட்டியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பத்மநாபன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி மாரத்தான் போட்டி பாலக்கரை வழியாகச் சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், பள்ளி, கல்லூரி விளையாட்டு மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இப் போட்டியில் மாணவிகள் ஜனா, தனிஷ்கா, ஜோதிகா , மாணவா்களில் மருதசேகா், சீமான், கனகராஜ் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பெற்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட முதன்மை க்கல்வி அலுவலா் சுவாமி. முத்தழகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பத்மநாபன் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழுகளும் வழங்கி பாராட்டினாா்.
இந் நிகழ்ச்சியில் நீதிபதிகள் இந்திராணி, முருளிதர கண்ணன், மோகனபிரியா, தன்யா, தினேஷ், கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா் காமராஜ், அரசு வவழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
நிறைவாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான சரண்யா நன்றி கூறினாா்.

