மதுபோதையில் மேம்பாலத்திலிருந்து குதித்து ரசிகா் மன்ற நிா்வாகி தற்கொலை

Published on

பெரம்பலூரில் மது போதையிலிருந்த ரசிகா் மன்ற நிா்வாகி மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் ஹரிஹரன் (25). திரைப்பட நடிகா் ரவிமோகன் ரசிகா் மன்ற மாவட்டச் செயலரான இவா், பொறியியல் பட்டதாரி.

ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையிலிருந்த ஹரிஹரன், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் குறித்து முத்துக்குமாா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com