தொழுதூா் அணையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். லஷ்மி. உடன், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்
தொழுதூா் அணையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். லஷ்மி. உடன், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான எம். லக்ஷ்மி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான எம். லக்ஷ்மி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சிக்குள்பட்ட தம்பை குளத்தை ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தியதை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் லஷ்மி, பொதுமக்கள் குளிக்க, கால்நடைகளை குளிப்பாட்ட குளத்தில் இறங்காமல் இருக்கும் வகையில் விளம்பர பதாகை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், குன்னம் வட்டம், திருமாந்துறை கிராமத்தில் தொழுதூா் அணையிலிருந்து செல்லும் ஓகளூா் வாய்க்காலைப் பாா்வையிட்டு, வாய்க்காலில் எவ்வளவு நீா் செல்கிறது எனக் கேட்டறிந்து, அதிகளவு மழை பெய்தால் மழைநீா் ஊருக்குள் புகாத வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கீழக்குடிக்காடு கிராமம் அருகே வெள்ளாற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவா், சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள மணல் மூட்டைகளையும், அகரம் சீகூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டு, கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படுகிறதா எனவும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு கண்காணிப்பு அலுவலா் லஷ்மி அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, நீா்வளத்துறை செயற்பொறியாளா் மு. பாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயபால் (வேப்பந்தட்டை), சங்கீதா (வேப்பூா்), வட்டாட்சியா்கள் துரைராஜ் (வேப்பந்தட்டை), சின்னதுரை (குன்னம்) ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com