பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை (ஜுலை 20) மின் விநியாகவும் இருக்காது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பெரம்பலூா் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இதனால், இந்த துணை மின் நிலையத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், சா.குடிகாடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்கு மாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிகாடு, நல்லூா் ஆகிய குதிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என, சிறுவாச்சூா் உதவி செயற்பொறியாளா் பி. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


