புதுக்கோட்டை அருகே விதிமீறி மது விற்றவர் "வாட்ஸ் அப்' தகவல் மூலம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றபோது பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிக்கும் விதமாக வாட்ஸ்அப் வசதியை ஏற்படுத்தினார்.இதையடுத்து கே. புதுப்பட்டி அருகேயுள்ள கல்லூர் வனப்பகுதியில் அனுமதியின்றி நீண்ட நாட்களாக கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மது விற்கப்படுவதாக எஸ்.பி-யின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒருவர் புகார் அனுப்பினார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி அளித்த உத்தரவின்பேரில்
கே.புதுப்பட்டி போலீஸார் நடத்திய விசாரணையில் மதுபானங்களை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி விற்ற கல்லூர் கணேசனை (66) போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.