அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை கால
Updated on
1 min read

அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட தகவல்:
மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு  இணையதளத்தில் விண்ணப்பிக்க 10.05.2017 முதல் 31.05.2017 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 15.6.2017 வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதால் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல், பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 15.6.2017 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com