மின்னல் பாய்ந்து அண்ணன் சாவு: தம்பி காயம்

புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி பகுதியில் புதன்கிழமை மின்னல் பாய்ந்து அண்ணன் உயிரிழந்தார். அவரது தம்பி காயமடைந்தார்.
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி பகுதியில் புதன்கிழமை மின்னல் பாய்ந்து அண்ணன் உயிரிழந்தார். அவரது தம்பி காயமடைந்தார்.
புதுகை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகேயுள்ள முத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன்கள் அன்பழகன் (33). பிரபாகரன் (30). இருவரும், அப்பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான செங்கல் சூளைக்கு சென்றுள்ளனர். அப்போது, மின்னல் பாய்ந்ததில் அன்பழகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.   பலத்த காயமடைந்த பிரபாகரன், புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com