பிசி, எம்பிசி, சீர்மரபினர் தொழில் தொடங்க கடனுதவி

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (டாப்செட்கோ) தொழில் செய்ய குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (டாப்செட்கோ) தொழில் செய்ய குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்திக்கொள்ளும் வகையில்,தொழிலில் ஈடுபட குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி வருகிறது. குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புற மக்களுக்கு ரூ.98 ஆயிரமும்,நகர்ப்புற மக்களுக்கு ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், கடன் திட்டங்கள் குறித்த விவரங்களுக்கு, ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் (மண்டல மேலாளார்கள், டாப்செட்கோ), அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகங்கள்,தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com