புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை பகுதியைச் சேர்ந்தவர் முகமதுஇப்ராகிம்(75), இங்கர்சால் (70) இருவரும் பைக்கில் புதன்கிழமை புதுகைக்கு வந்து கொண்டிருந்தனர்.
நெடுஞ்சேரி அருகே எதிரே வந்த தனியார் தபால் சேவை நிறுவன வேன் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், பைக்கை ஓட்டிய இங்கர்சால்,முகமதுஇப்ராகிம் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த வெள்ளனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே முகமது இப்ராகிம் (75) உயிரிழந்தார். பலத்த காயமுற்ற இங்கர்சால் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸார் வழக்குபதிவு செய்து வேன் ஒட்டுநர் சேலத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.