இலங்கை கடற்படையினரால் புதுகை மீனவர்கள் 6 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
தமிழகக் கடலோர மாவட்டங்களில் கடந்த ஏப்.15 முதல் 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுகை மாவட்டம், நம்புதாளை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மாலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புதன்கிழமை அதிகாலையில் அங்குவந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகை பறிமுதல் செய்ததுடன்,சி.தனசேகரன்(35),எம்.சதீஸ் (19),கே.மாதவன்(33), எம்.சிங்காரவேலன்(20), பி. சத்யபாலா(19) மற்றும் எ.சிவா(35) ஆகிய 6 பேரைக் கைது செய்து இலங்கை  கொண்டு சென்றனர். இதனால்,மீனவர்களிடையே பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com