சாலை விபத்தில் காயமடைந்தவர் சாவு

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் சாலையின் மையத் தடுப்பில் மோதி காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
Published on

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் சாலையின் மையத் தடுப்பில் மோதி காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் பாகனூரைச் சேர்ந்தவர் வையாபுரி மகன் வேல்முருகன்(27). இவர் கடந்த ஆக. 30 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் விராலிமலை அருகேயுள்ள தண்ணீர் பந்தல் பட்டி அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள மையத்தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com