சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on
Updated on
1 min read

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்...
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குநர்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் ஊதியம்  வழங்க வேண்டும்; அரசாணைப்படி ஊழியர்களின் பெயர்ப்பட்டியலை பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு சங்கத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் ப.சண்முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, கிராமப்பஞ்சாயத்து இணைப்புக்குழு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com