நெடுவாசலில் 148ஆவது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 148-ஆவது நாளாக அப்பகுதி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 148-ஆவது நாளாக அப்பகுதி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, கடந்த ஏப்.12-ஆம் தேதி அப்பகுதியினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
தொடர்ந்து, பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே 148-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், பலமாதங்களாக போராடிவரும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com