ஆலங்குடி பகுதியில் 4 இடங்களில் குடிநீர் கோரி சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி பகுதியில் புயல் பாதிப்புக்குள்ளாகி 20 நாள்களாகியும் மின்சாரம், குடிநீர் வழங்காததைக் கண்


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி பகுதியில் புயல் பாதிப்புக்குள்ளாகி 20 நாள்களாகியும் மின்சாரம், குடிநீர் வழங்காததைக் கண்டித்து 4 இடங்களில் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான ஆலங்குடி பகுதியில் தடைபட்ட மின்சாரத்தை விநியோகிக்க மின் ஊழியர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பல கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால், குடிநீர் கிடைக்காமலும், இருளில் மூழ்கியும் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்காளாகி வருகின்றனர்.இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டு 20 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர், நிவாரணம் வழங்காததைக் கண்டித்து ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காகாட்டில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல, பி.மாத்தூரில் குடிநீர், மின்சாரம், நிவாரணம் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற ஆலங்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகச்செய்தனர்.இதேபோல, கறம்பக்குடி அருகேயுள்ள அம்புக்கோவில், குளப்பெண்பட்டி மக்கள் ஆத்தங்கரைவிடுதி பேருந்து நிறுத்தம் அருகேயும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கறம்பக்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இம்மறியல் போராட்டங்களால் அப்பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com