புதுக்கோட்டை புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நெட்,செட், பி.எச்.டி ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. ஜவஹர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தேசிய, மாநில ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியர்களுக்கான கல்வித் தகுதிகளோடு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களையும், அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
இத்தகைய கல்வித் தகுதியுடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியருக்கான தேர்வின்போது சிறப்பு மதிப்பெண் அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி 21-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள கோரிக்கை விளக்க பேரணியில் மாவட்டத்தில் இருந்து திரளானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.