புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், இருந்திரப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இலுப்பூர் வட்டாட்சியர் சோனை கருப்பையா தலைமை வகித்தார். கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், நீக்கல், போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து இருந்திரப்பட்டி ஊராட்சி பகுதிகளில் மரம் நடும் விழா நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, விஏஓ ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இருந்திரப்பட்டி ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி செய்தார்.