ஊருக்குள் பேருந்துகள் வராவிடில் போராட்டம்: வேகுப்பட்டி மக்கள்

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி கிராமத்துக்குள்  வராத பேருந்துகளை  வரும் 22-ம் தேதி சிறை பிடித்து போராட்டம் நடத்த  பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி கிராமத்துக்குள்  வராத பேருந்துகளை  வரும் 22-ம் தேதி சிறை பிடித்து போராட்டம் நடத்த  பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து வேகுப்பட்டி, காட்டுப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: பொன்னமராவதியிலிருந்து வேகுப்பட்டி வழியாக புதுக்கோட்டை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வேகுப்பட்டிக்குள் செல்ல பர்மிட் உள்ள நிலையில் முறையாக ஊருக்குள் இயக்கப்படுவதில்லை. 
வேகுப்பட்டி வழித்தடத்திலேயே சில பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. முன்பு சாலை சீராக இல்லை எனக் கூறி பேருந்துகள் வர மறுத்த நிலையில் தற்போது புதிய சாலை போட்டும், பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை. 
எனவே வரும் 22-ம் தேதி வேகுப்பட்டி ஊருக்குள் செல்லாத பேருந்துகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com