பொன்னமராவதி வட்டம் ஒலியமங்களம் ஊராட்சியில் பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்ட வழங்கல் அலுவலர் (பொ) ஜெயராமன் தலைமை வகித்தார். முகாமில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு கோரி மனுக்கள் பெறப்பட்டன. மேலும் ஆன்லைன் மூலமாக ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவை செய்வது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. தனி வருவாய் ஆய்வாளர் பாண்டி, விஏஏ ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.