திருவரங்குளத்தில் திருட முயன்ற வழக்கில்  இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் 6 இடங்களில் திருட முயன்ற வழக்கில் திருவாரூர் இளைஞரை போலீஸார் சனிக்கிழமை  கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் 6 இடங்களில் திருட முயன்ற வழக்கில் திருவாரூர் இளைஞரை போலீஸார் சனிக்கிழமை  கைது செய்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அக்.9-ம் தேதி  6 இடங்களில் திருட முயன்ற மர்ம நபரை பிடிக்க முயன்றபோது, அரிவாளை காட்டி மிரட்டியவாறு திருடிய பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு  போலீஸாரிடம் சிக்காமல் தப்பிவிட்டார். 
இதைத்தொடந்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த முகைதீன் ஹாஜா மகன் முகமது தமீம் (29) என்பவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 19 பவுன் நகைகள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com