விபத்தில் மின் ஊழியர் சாவு

பட்டுக்கோட்டையை அடுத்த சொக்கநாதபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சி.இளையராஜா (38). பட்டுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். 

பட்டுக்கோட்டையை அடுத்த சொக்கநாதபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சி.இளையராஜா (38). பட்டுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். 
இவர் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு பட்டுக்கோட்டை புறநகர் கிழக்குப் பகுதியில் பணி முடிந்து, தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கோட்டாக்குடி சம்பட்டை குளம் அருகே போய்க் கொண்டிருந்தபோது, இவருக்கு முன்னால் இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற சுமை ஏற்றும் வாகனத்தை அதன் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார். இதனால் அந்த வாகனத்திலிருந்த ஒரு இரும்புக் கம்பி பின்னால் வந்து கொண்டிருந்த இளையராஜாவின் கழுத்தில் குத்திக் கிழித்தது.இதில் பலத்த காயமடைந்த இளையராஜா அதேயிடத்தில் உயிரிழந்தார்.இதுகுறித்து இளையராஜாவின் தந்தை சி.சிவசாமி அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து சுமை ஏற்றும் வாகன ஓட்டுநர் செருபாலக்காடு ஏ.முருகவேல் என்பவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com