கந்தர்வகோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 12 ஆவது ஒன்றிய மாநாடு ஒன்றியத் தலைவர் கே. மில்லர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி. பன்னீர்செல்வம், ஒன்றியச் செயலாளர் வி. இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில், மாநில துணைத் தலைவர் என். ரெஜீஸ் குமார், மாவட்டச் செயலாளர் துரை. நாரயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநாட்டை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி பேரணி புதுகை , தஞ்சை சாலை வழியாக மாநாட்டுத் திடலை நோக்கி சென்றடைந்தது.