புதுக்கோட்டை சிவபுரம் ஜெ.ஜெ.கல்லூரியில் உயிர் வேதியியல் துறை கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உடல் ஆரோக்கியத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அரசு மருத்துவக் கல்லூரியின் ஆயுர்வேத மருத்துவர் மீனாகாந்தி பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.திரளான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.