புதிய துணை மின்நிலையம் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க  உத்தரவு

கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பழைய கந்தர்வகோட்டை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம்

கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பழைய கந்தர்வகோட்டை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புதுக்கோட்டை பிரிவின் கீழ் கந்தர்வகோட்டை அருகே உள்ள பழைய கந்தர்வகோட்டையில் ரூ.3.25 கோடி மதிப்பில் 33 கி.வாட் மின்திறன் கொண்ட புதிய துணை மின் நிலையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் தொடக்கி வைத்தார். 
இந்த துணை மின் நிலையத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், விவசாயிகள், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், கந்தர்வகோட்டை உதவி மின் செயற்பொறியாளர் எஸ்.சேவியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com