மணமேல்குடி அருகே சுமை ஆட்டோமீது வேன் மோதியதில் மாணவர் உள்பட 2  பேர் சாவு

மணமேல்குடி அருகே  சுமை ஆட்டோ  மீது வேன் மோதியதில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனர். 

மணமேல்குடி அருகே  சுமை ஆட்டோ  மீது வேன் மோதியதில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனர். 
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வடக்கூரைச் சேர்ந்தவர் முனியய்யா. இவரது மகன் கோபி(26), சொந்தமாக மைக் செட் கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகனான அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த சிவப்பிரகாசத்துடன்(12) நாகுடியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் மணமேல்குடி நோக்கி சுமை ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். சுமை ஆட்டோவை கோபி ஓட்டினார். 
பிள்ளையார் திடல் பகுதியில் வந்த போது  ராமநாதபுரத்திலிருந்து வந்த வேன், சுமை ஆட்டோ மீது மோதியது. இதில், சுமை ஆட்டோ தலைகுப்புறக் கவிழ்ந்ததில், அதில் இருந்த கோபி, சிவப்பிரகாசம், முனியய்யா மற்றும் வேன் ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த மனோகரன் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி,  சிவப்பிரகாசம்  இருவரும் உயிரிழந்தனர். முனியய்யா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து மணமேல்குடி காவல் ஆய்வாளர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து  வேன் ஓட்டுநர் மனோகரனை வெள்ளிக்கிழமை கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com