புதுக்கோட்டை
வடகாட்டில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்
ஆலங்குடி அருகே வடகாட்டில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகே வடகாட்டில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்கார்ப் இந்தியா ஆராய்ச்சி மையம், கிராம தொலைதூர மனநல சேவை மையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.புஸ்பராஜ் தலைமை வகித்தார். ஸ்கார்ப் இந்தியா சமூக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு, மனச்சிதைவு குறித்து பேசினார். வடகாடு கூட்டுறவு சங்கத் தலைவர் லெ.சின்னு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.