புதுக்கோட்டை அருகேயுள்ள கட்டியாவயல் பகுதியில் அமமுக சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மேலும் பேசியது:
தற்போது தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவிற்கு வரும். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். மக்கள் அமமுக பக்கம் உள்ளார்கள் என்பதற்கு சாட்சியாகவே இங்கு கூடியுள்ள மக்களின் கூட்டம் காட்டுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா டாக்டராக திகழ்கிறார். ஆர்.கே நகரில் நான் வெற்றிபெற்று முதல்வராகி விடுவேன் என்பதால் தான் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் திட்டமிட்டு நாடகம் நடத்தி தேர்தலை நிறுத்தினார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர்கரின் அரசியல் வாழ்வு முடிவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இன்றோ, நாளையோ அவர் மீது நடவடிக்கை பாய காத்திருக்கிறது. ஆர்கே நகரில் புறமுதுகிட்டு ஓடிய அமைச்சர்களால் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் என்ன செய்ய முடியும். அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று பேசினார்.