சிறுபான்மையின கல்வி உதவித்தொகை பெற வழிகாட்டும் முகாம்

மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் வழங்கப்படும் கல்வி


மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்தல், புதுப்பித்தல், தொடர்பான வழிகாட்டுதல் முகாம் அன்னவாசலில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலக சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்வி உதவித்தொகை பெற வந்தவர்களிடம் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை கொடுத்து பூர்த்தி செய்யும் வழிமுறைகளை எடுத்துக் கூறினர்.
பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட சிறுபான்மை நல அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஐக்கியநல கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பஷீர் அலி செய்திருந்தார். இதில் அன்னவாசல் ஜமா அத் துணை தலைவர் முகமது ரிசா, மீரா மைதீன், முகமது நசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com