பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.


அண்ணாவின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையில், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தொடங்கி வைத்தார்.போட்டியில், 30 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், மாவட்ட மிதிவண்டி கழக செயலர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com