அண்ணாவின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையில், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தொடங்கி வைத்தார்.போட்டியில், 30 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், மாவட்ட மிதிவண்டி கழக செயலர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.