ஆலங்குடி பகுதியில் சிவகங்கை தொகுதி அமமுக வேட்பாளர் வி.பாண்டி வெள்ளிக்கிழமை வாக்குசேகரித்தார்.
சிவகங்கை தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி தொகுதியில் திருக்கட்டளை, காயம்பட்டி, அரசடிபட்டி, கும்மங்குளம் , ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் பாண்டி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆலங்குடி பள்ளிவாசலுக்குச் சென்ற போது, அங்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், அமமுக மாநில மகளிரணித் துணைச்செயலர் விஜயா, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச்செயலர் எம்.எஸ்.எம்.ஜியாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.