சக்கர நாற்காலி வைத்திருப்போர் தேர்தல் பணிக்கு அளித்து உதவலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சக்கர நாற்காலி வைத்திருப்போர், தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்குப் பயன்படுத்துவதற்காக


புதுக்கோட்டை மாவட்டத்தில் சக்கர நாற்காலி வைத்திருப்போர், தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்குப் பயன்படுத்துவதற்காக வழங்கி உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் சக்கர நாற்காலிகள் வைத்திருக்கும் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சக்கர நாற்காலிகளை வழங்கி உதவிடலாம். அவ்வாறு வழங்கப்படும் சக்கர நாற்காலிகள் வாக்குப்பதிவு முடிந்த அன்று மாலையே நல்ல நிலையிலேயே திரும்ப ஒப்படைக்கப்படும். மேலும் அதற்கான வாடகையாக ரூ. 500 வழங்கப்படும். 
சக்கர நாற்காலிகளை தேர்தல் பணிக்காக வழங்க விரும்புவோர் அந்தந்தப் பகுதி நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சிச் செயலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com