புதுக்கோட்டை தொகுதியை மீட்டுத்தருவேன்

புதுக்கோ ட்டை மக்களவைத் தொகுதியை தொகுதி மறுசீரமைப்பின்போது கட்டாயம் மீட்டுத் தருவேன் என்றார் திருச்சி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர்.


புதுக்கோ ட்டை மக்களவைத் தொகுதியை தொகுதி மறுசீரமைப்பின்போது கட்டாயம் மீட்டுத் தருவேன் என்றார் திருச்சி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர்.
திருச்சி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நிறைவு செய்தார்.
அப்போது அவர் பேசியது: எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட நான் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறேன். பதவியில் இருந்தபோதும், பதவியில் இல்லாதபோதும் கட்சி எல்லையைக் கடந்து சாதி, மதங்களைக் கடந்து புதுக்கோட்டை மக்களையே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறேன். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக வேட்பாளர் இந்த அளவுக்கு ஒன்றிட முடியுமா?
அமமுக என்பது ஓர் அரசியல் கட்சியே இல்லை. இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. 
எனவே, என்னை வெற்றி பெறச் செய்தால் புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். 
குறிப்பாக தொகுதி மறுசீரமைப்பின்போது கட்டாயம் புதுக்கோட்டை தொகுதியை மீட்டுத் தருவேன் என்றார் திருநாவுக்கரசர்.
இறுதிக் கட்டப் பிரசாரத்தில் மாவட்ட திமுக செயலர் பெரியண்ணன் அரசு எம்எல்ஏ உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கலந்து கொண்டனர். 
முன்னதாக புதுக்கோட்டையின் வடக்கு 3ஆம் வீதி, கீழ 3ஆம் வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை, அம்பாள் புரம், உழவர்சந்தை சாலை, தெற்கு 4ஆம்வீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com