புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிளை நிர்வாகி முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலர் மு.மாதவன், ஒன்றியச் செயலர் ஆர்.சொர்ணக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தில், தேத்தான்பட்டியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணவேண்டும், திருக்கட்டளை கொட்டாங்கரை பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு உடனே வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும், திருவரங்குளம்- வேப்பங்குடி சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.