"நல்லி-திசை எட்டும்' நடத்தும் மொழியாக்கப் போட்டிகள்: பரிசுகளை வெல்ல அழைப்பு

"திசை எட்டும்' மொழியாக்க காலாண்டு இதழுடன், நல்லி நிறுவனத்தினர் இணைந்து நடத்தும் மொழியாக்கப்

"திசை எட்டும்' மொழியாக்க காலாண்டு இதழுடன், நல்லி நிறுவனத்தினர் இணைந்து நடத்தும் மொழியாக்கப் போட்டிகள் புதுக்கோட்டையில் வரும்  23ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மூன்று வகுப்பினருக்கு ஒரு பிரிவாகவும், அனைத்து வகையான கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், வயது பேதமின்றி பொதுப் பிரிவினருக்கு ஒரு பிரிவாகவும் இந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டியின்போது வழங்கப்படும் படைப்பினை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்க வேண்டும். ஆக மொத்தம் 6 போட்டிகளில் தலா ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.  இத்துடன் விருது, பாராட்டுச் சான்றிதழும் உண்டு. மேலும், பங்கேற்பார்கள் அனைவருக்கும் சான்றிதழும், நூல்களும் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் வரும் ஆக. 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.
போட்டியில் பங்கேற்போர் காலை 9 மணிக்கு வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டையுன் வர வேண்டும். பொதுவானவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான அடையாளச் சான்று எடுத்து வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சா. விஸ்வநாதனை 94436 39397 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போட்டிகளில் வெல்வோருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி, கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com