அண்டக்குளத்தில் இளையோர் நாடாளுமன்றம்

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த அண்டக்குளம் அரசு மேல்நிலைப்


புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த அண்டக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளையோர் நாடாளுமன்றம் மற்றும் தூய்மை இரு வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யுவகேந்திராவின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திராவின் கணக்காளர் ஆர் .நமச்சிவாயம் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி வாழ்த்துரை வழங்கினார். உடல்நலம் காத்தலில் யோகா என்ற தலைப்பில் பாப்புலட்சுமி, இளையோர் மன்றமும் சமூகப் பொறுப்பும் என்ற தலைப்பில் ப. ரஞ்சித், மக்களுக்கான இலவச சட்ட உதவி என்ற தலைப்பில் சின்ராஜ் ஆகியோர் பேசினர். இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 80 இளைஞர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தேசிய இளையோர் தொண்டர்கள் ரம்யா, சுந்தரபாரதி, சத்தியநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com